Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd October 2023 20:59:45 Hours

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சமய நிகழ்வுகளுடன் 74 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

எதிர்வரும் 74 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் திகதி யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் ஆசீர்வாதங்களை கோரும் நோக்கத்துடன் சமய நிகழ்வுகள் நடைபெற்றன.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் கேஜேஎன்எம்பீகே நவரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி அவர்களின் சார்பாக, பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் சமய நிகழ்வுகளில் கலந்துகொண்டார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் நயினை தீவிலுள்ள புனித நாகதீப ராஜமஹா விகாரையில் பிக்குகளுக்கு தானம் வழங்கினார்.