02nd October 2023 23:16:04 Hours
இராணுவ பொறியியல் சேவைகள் படையணியினால் 2023 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் இராணுவக் குடும்பங்களின் தரம் 5 மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்ளை வழங்கினர்.
இராணுவ பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் சனிக்கிழமை (செப்டெம்பர் 23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இத் திட்டத்திற்கு கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான திரு.பிரசாத் லொகுபாலசூரிய அவர்களின் அனுசரணையில் 100 மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டன.
மாணவர்களின் எதிர்கால இலக்கு மற்றும் கல்விக்கு இலங்கை இராணுவத்தின் அர்ப்பணிப்பை இந்த நிகழ்ச்சித்திட்டம் எடுத்துக்காட்டுகிறது. இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், திரு.பிரசாத் லொகுபாலசூரிய மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.