26th September 2023 22:00:28 Hours
இராணுவ முயற்சியின் ஒரு திட்டமாக வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் அனுராதபுரத்தில் உள்ள 21 வது காலாட் படைப்பிரிவின் 211 வது காலாட் பிரிகேட், 2023 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் தரம் 5ஐ சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்களை வழங்கினர்.
211 வது காலாட் பிரிகேடின் வேண்டுகோளின் பேரில் பதவிய பிரதேச மக்கள் வங்கி மற்றும் இமாஷி பப்ளிகேஷன்ஸ் லிமிடெட் வழங்கிய அனுசரணையில் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கும் இத் திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்டது. பதவிய அ/புத்தங்கல மத்திய கல்லூரியில் சனிக்கிழமை (9) நடைபெற்ற இவ்விநியோகம் மற்றும் கருத்தரங்கில் பிரதம அதிதியாக 211 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஐஎன் கந்தனாராச்சி ஆர்எஸ்பீ அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதிகளாக இமாஷி பப்ளிகேஷன்ஸின் பிரதிநிதிகள், பதவிய மக்கள் வங்கியின் அதிகாரிகள், 9 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் மற்றும் அப் பகுதியில் சேவையாற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.
தகுதியான மாணவர்களின் எதிர்கால வாய்ப்புகள் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்கான இலங்கை இராணுவத்தின் அர்ப்பணிப்பை இந்நிகழ்ச்சித்திட்டம் எடுத்துக்காட்டுகிறது.
21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஐஏஎன்பி பெரேரா ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களினால் இத் திட்டத்திற்கான ஆசி வழங்கப்பட்டது.