Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th September 2023 22:09:47 Hours

விஷேட படையணி புதிய படைத்தளபதி பதவியேற்பு

விஷேட படையணியின் 14 வது படைத்தளபதியாக மேஜர் ஜெனரல் சந்திமல் பீரிஸ் ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் வியாழன் (செப். 07) மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் நாவுல விஷேட படையணி தலைமையகத்தில் பதவியேற்றார்.

நுழைவாயில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி சிரேஷ்ட அதிகாரியை நிலைய தளபதி மற்றும் பணிநிலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, அணிவகுப்பு மைதானத்தில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

மகா சங்க உறுப்பினர்கள் மற்றும் கத்தோலிக்க மத தலைவர்களின் பிரார்த்தனைகளுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தை இடுவதன் மூலம் அவர் புதிய பதவியினை பெறுப்பேற்றுக்கொண்டார்.

மேலும், படைத்தளபதி வளாகத்தில் உள்ள போர்வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன், வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு அன்றைய தினத்தை நினைவுகூரும் முன் அனைத்து நிலையினருக்கும் உரையாற்றினார்.

இந் நிகழ்ச்சியில் 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்டிடப்ளியுகேஎன் ஏரியகம ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ, 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டப்ளியுடப்ளியுவீ ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.