06th September 2023 18:23:26 Hours
கலாஓய இராணுவ தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள படையினர் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் கலாஓயா முனமல்கஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 30 ஏழை மாணவர்களுக்கு 02 செப்டம்பர் அன்று முனமல்கஸ்வெவ ஆரம்ப பாடசாலையில் பாடசாலை உபகரணங்களை பரிசாக வழங்கினர்.
இராணுவ தொழிற்பயிற்சி நிலைய தளபதி பிரிகேடியர் எச் வி ஏ சோமவீர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்ததுடன் இந்நிகழ்வுக்கு நிதியுதவி வழங்கிய கொழும்பைச் சேர்ந்த திரு.பிரியன் பெரேரா உட்பட நலம் விரும்பிகளின் அனுசரணையை ஒருங்கிணைத்தார்.
நன்கொடை நிகழ்ச்சியின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.