Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th August 2023 22:20:55 Hours

இந்தியா தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பிரதிநிதிகள் இராணுவ தளபதியை சந்திப்பு

ரியர் அட்மிரல் சஞ்சய சச்தேவா தலைமையிலான இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் ஒன்பது பேர்கொண்ட பிரதிநிதிகள் குழு, தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பாடநெறியின் ஒரு பகுதியாக உத்வேகம், கருத்து மற்றும் மாற்றங்களை பெற்று கொள்ளும் வகையில் ஐந்து நாள் (27-31 ஓகஸ்ட்) ஆய்வுப் பயணத்தில் திங்கட்கிழமை (28) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, தூதுக்குழுவின் தலைவரான ரியர் அட்மிரல் சஞ்சய சச்தேவா என்எம் எஸ்டிஎஸ் (கடற்படை) என்டிசீ பிரிகேடியர் ரஜத் குமார், பிரிகேடியர் அனுஜ்காலியா வீஎஸ்எம் மற்றும் எயார் கமடோர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா, வீஎம் வீஎஸ்எம் ஆகியோருடன் தனது சுருக்கமான மற்றும் சுமுகமான கலந்துரையாடலின் இராணுவ அமைப்புகளுடன் தகவல் பரிமாற்றம் மற்றும் அனுபவம் தொடர்பான கருத்துக்களையும் பயிற்சியின் முக்கியத்துவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவில் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகப் படிப்பைப் பின்தொடர்ந்த போது, அவருடைய பாடநெறி தோழரான இந்தியத் தூதுக்குழுவின் தலைவரான ரியர் அட்மிரல் சஞ்சய சச்தேவா என்எம் எஸ்டிஎஸ் (கடற்படை) என்டிசீ. அவர்களை சந்தித்தது தற்செயல் நிகழ்வாகும்.

சுமூகமான சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதி மற்றும் ரியர் அட்மிரல் சஞ்சய் சச்தேவா என்எம் எஸ்டிஎஸ் (கடற்படை) என்டிசீ ஆகியோர் நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டனர்.

பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் பிரிகேடியர் பீகேஎஸ் நந்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரும் கலந்துரையாடலுடன் இணைந்திருந்தனர்.