Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd August 2023 22:34:10 Hours

இராணுவ பொது சேவைப் படையணியின் புதிய படைத் தளபதி பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்வீஎம்என்டிகேபி நியாங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் புதிய படைத் தளபதியாக (ஓகஸ்ட் 21) திங்கட்கிழமை இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வருகைதந்த புதிய படைத் தளபதியை பிரதான நுழைவாயிலில் சிரேஷ்ட அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர். பின்னர் இராணுவ பொது சேவைப் படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. புதிய படைத் தளபதி, முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்துடன் படையணியின் பணி நிலை அதிகாரிகளின் முன்னிலையில் மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது புதிய நியமனத்தில் கடமைகள் மற்றும் பொறுப்புகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

படையினருக்கான உரையுடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவுற்றன. அவர் தனது உரையில் அர்ப்பணிப்பின் முக்கியத்துவம், குழுவாகச் செயல்படுவதன் மூலம் நிறுவன இலக்குகளை எவ்வாறு அடைவது மற்றும் வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.