Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th August 2023 20:37:42 Hours

55 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி பதவியேற்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் 55 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக வியாழன் (17 ஓகஸ்ட் 2023) கிளிநொச்சியில் உள்ள 55 வது படைப்பிரிவு தலைமையக அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

அணிவகுப்பு மரியாதையினை பெறுவதற்கு முன்னாதாக புதிய தளபதிக்கு நுழைவாயிலில் 14 வது தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து பணிநிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

தொடர்ந்து புதிய படைப்பிரிவு தளபதி கடமைகளை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். அதன்பின், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் பல குழு படங்களை எடுத்துக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றுவதற்கு முன் முகாம் வளாகத்தில் மரக்கன்றை நடுவதற்கு அழைக்கப்பட்டார். அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.