Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th August 2023 20:24:17 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணி புதிய தளபதி பதவியேற்பு

மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் புதிய தளபதியாக வெள்ளிக்கிழமை (17 ஓகஸ்ட் 2023) கொஸ்கமவில் உள்ள இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிய தளபதியினை இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ பிரதம பதவி நிலை அதிகாரி - இலங்கை இராணுவ ரைபிள் படையணி மற்றும் இலங்கை இராணுவ முன்னோடி படையணி ஒருங்கிணைப்பு அதிகாரி மற்றும் இராணுவ தொண்டர் படையணி படையலகுகளின் கட்டளை அதிகாரியினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து இராணுவ மரபுகளுக்கு இணங்க இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை மற்றும் மரியாதை அணிவகுப்பும் புதிய தளபதிக்கு வழங்கப்பட்டது.

அவர் தனது புதிய அலுவலக வளாகத்திற்கு வந்த பின்னர், 'செத்பிரித்' பாராயணங்கள், மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில், சுப வேளையில் அலுவலகத்தை சம்பிரதாயமாக ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு புதிய அலுவலகத்தில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

அதன்பின், புதிய தளபதி வளாகத்தில் ஒரு மாங் கன்று நடுவதற்கு அழைக்கப்பட்டதுடன் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் அனைத்து நிலையினருடான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொள்வதற்கு முன்பு அலுவலகத்தின் திறப்பு விழாவை நினைவுகூர்ந்தார். இறுதியாக அவர் படையினருக்கான உரை ஆற்றினார்.

இராணுவத்திலுருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களை தொடர்ந்து மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்கள் இக் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்கள் இந்த நியமனத்திற்கு முன்னர் மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதியாக பணியாற்றினார்.