17th August 2023 20:42:24 Hours
அனுராதபுரம் ‘அபிமன்சல-1’ நல விடுதி அதன் 12 வது ஆண்டு விழாவை புதன்கிழமை (ஜூலை 26) அன்று ‘அபிமன்சல-1’ இன் தளபதி பிரிகேடியர் டிஎம்கே சக்ரவர்த்தி ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.
தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை அளிக்கப்பட்டதுடன், 'அபிமான்சல-1' இன் அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.
அன்றைய நினைவுச் சின்னமாக அவர் வளாகத்தில் மாங் கன்று ஒன்றை நட்டியதுடன் அனைத்து நிலையினருடனான மதிய உணவின் போது புனர்வாழ்வில் உள்ள சிப்பாய்களுடன் கலந்துரையாடினார்.
அன்றய நாளில் சிப்பாய்கள் இரவு முழுவதும் ‘பிரித்’ பாராயணம் செய்ததுடன் அடுத்த நாள் காலை மகா சங்க உறுப்பினர்களுக்கு தானம் வழங்கப்பட்டது.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஏடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.