16th August 2023 17:58:15 Hours
18 வது விஜயபாகு காலாட் படையணி படையினரால் பொருளாதார பயிர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கல்முனை பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நூற்றுக்கணக்கான மா, தோடை, மாதுளை மற்றும் ஜம்பு போன்ற பல மரக்கன்றுகள் சனிக்கிழமை (ஓகஸ்ட் 12) 18 வது விஜயபாகு காலாட் படையணி முகாம் வளாகத்தில் விநியோகிக்கப்பட்டன.
இந்த ஏற்பாட்டின் போது 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டனர்.
18 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.