16th August 2023 18:04:35 Hours
தம்புலுஹல்மில்லவெவ இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகம் ஓய்வு பெறும் தனது படைத் தளபதியான மேஜர் ஜெனரல் எச்எம்யு ஹேரத் ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ எச்டிஎம்சி பீஎஸ்சி அவர்களுக்கு சனிக்கிழமை (ஓகஸ்ட் 12) பிரியாவிடை அளித்தது.
ஓய்வு பெறும் படைத்தளபதிக்கு மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் டபிள்யூஎம்எஸ்சிகே வனசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, இயந்திரவியல் காலாட் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் ஏஎம்ஏ அபேசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி, இயந்திரவியல் காலாட் படையணியின் பேரவை உறுப்பினர்களுடன் இணைந்து வரவேற்றனர்.
நினைவுத்தூபியில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தும் முன், நுழைவாயிலில் இயந்திரவியல் காலாட் படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், மேஜர் ஜெனரல் எச்எம்யு ஹேரத் ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ எச்டிஎம்சி பீஎஸ்சி அவர்கள் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்து உபசாரத்தில் கலந்து கொண்டதுடன் படையினருடன் உரையாடினார். பின்னர் படையணியின் அதிதிகள் பதிவேட்டில் தனது எண்ணங்களை பதிவிட்டார். மேலும் வெளியேறும் படைத் தளபதிக்கு வீதி மரியாதையும் வழங்கப்பட்டது.
இவர் இயந்திரவியல் காலாட் படையணியின் 15 வது படைத் தளபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிட தக்கதாகும்.