07th August 2023 21:27:41 Hours
பயிற்றுவிப்பு முறைமை பாடநெறி - 67 இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஓகஸ்ட் 5 அம்பாறையில் உள்ள போர் பயிற்சிப் பாடசாலையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் போர் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் டிஎன்ஆர் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பயிற்சி வீரர்களின் பயிற்றுவிப்பாளர்களின் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இப் பாடநெறி இடம் பெற்றதுடன், இப் பாடநெறியில் 166 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் ஒரு மாத காலப் பயிற்சியை நிறைவு செய்தனர். இப் பாடநெறியின் சிறந்த மாணவருக்கான சான்றிதழ் லான்ஸ் கோப்ரல் எச்டி அனுஷிகாவுக்கு வழங்கப்பட்டது.
பரிசளிப்பு நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.