Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st February 2023 20:48:45 Hours

மத்திய பாதுகாப்பு படையினர் ஹல்துமுல்ல மாணவர்களுக்கு பாடசாலை உபகரணம் வழங்கல்

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினரின் ஒருங்கிணைப்பில் வண. ஹல்துமுல்ல ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரையின் பிரதமகுரு கஹகொல்லே ஆனந்த தேரரினால் ஹல்துமுல்ல கிராம சேவை பிரிவில் வசிக்கும் 220 வறிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சனிக்கிழமை (பெப்ரவரி 18) வழங்கினார்.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பு மூலம் வெளிநாட்டில் உள்ள நன்கொடையாளர்கள் குழு இந்த திட்டத்திற்கு ஆதரவளிக்க முன்வந்தனர். இதில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா 8,000 ரூபா பெறுமதியான பாடசாலை எழுதுகருவிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.ஹல்துமுல்ல ஸ்ரீ சுதர்ஷனாராம விகாரையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அதே பகுதியில் வசிக்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த அங்கவீனமுற்ற நபர்களுக்கு 5 சக்கர நாற்காலிகள் பரிசாக வழங்கப்பட்டன.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி சார்பாக மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி பிரிகேடியர் சஞ்சீவ நானுமியாராச்சி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதோடு, சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி உட்பட பல அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பயனாளிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர்.