21st February 2023 20:20:45 Hours
ஞாயிற்றுக்கிழமை (19) சிவனொளி பாதமலை யாத்திரை சென்று திரும்பும் போது நோர்டன், டப்லோ பகுதியில் பேருந்து விபத்துக்குள்ளாகி பள்ளத்தில் விழுந்துள்ளது. இதன் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது காலாட் படைபிரிவின் 112 வது காலாட் பிரிகேடின் 19 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
உடனடியாக குறித்த இடத்திற்கு சென்ற படையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அப்பகுதியில் உள்ள கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு உதவினர். அதே நேரத்தில் காயமடைந்தவர்களில் சிலருக்கு படையினர், முதலுதவி அளித்தனர். மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தளபதிகள் அவசரநிலையை உன்னிப்பாகக் கண்காணித்து ஒருங்கிணைத்தனர்.