09th April 2023 20:05:49 Hours
பனாகொட இலங்கை இலேசாயுத காலாட் படைத் தலைமையக படையினரால் வியாழக்கிழமை (ஏப்ரல் 06) சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை கொண்டாடப்பட்டது. இவ் விழா இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும், இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், அவரின் துணைவியான இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தனுஷா வீரசூரிய, அவர்களும் கலந்து கொண்டார்.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் புத்தாண்டு நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் மரதன் ஓட்டம், வழுக்கு மரம் ஏறுதல், தலையணை சண்டை, கயிறு இழுத்தல், வினோத உடை போட்டி போன்ற வேடிக்கையான அம்சங்களை உள்ளடக்கியது. அத்துடன் கிராமத் தலைவரின் மாதிரி வீடு (ஆரச்சில வளவ்வ), கிராமப்புற வீடு (கெமி கெதர) மற்றும் வழக்கமான புத்தாண்டு மாதிரிகள் ஆகியவற்றால் வண்ணமயமாக காட்சியளித்தது.
அந்த விளையாட்டுக்கள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் பிரதம அதிதியால், பல இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து வழங்கப்பட்டன.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் புத்தாண்டு நிகழ்வில் இடம் பெற்ற தொடர் நிகழ்வுகளில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் பலர் பங்கேற்றனர்.