18th March 2023 21:15:22 Hours
'மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையின் கலை' என்ற தொனிப்பொருளில் விரிவுரை ஒன்று, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 15 மார்ச் 2023 அன்று இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் அழைப்பின் பேரில் ஆலோசனை உளவியலாளராக பணிபுரியும் திருமதி பாக்யா அபேசிங்க அவர்கள் இந்த விரிவுரையை ஆற்றினார்.
விரிவுரையாளர் தனது உரையின் போது பெற்றோரோ ஒரு குடும்பத்தின் மேம்பாட்டுக்கான வழுவான தூன்களும், சிறந்த சந்ததிகளை வடிவமைக்கும் அச்சுகளும் ஆகும் என வலியுறுத்தினார்.
அமைதியான இசைக் கூறுகளுடன் கலந்த விரிவுரையானது, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உந்துதல் தரும் முக்கிய கூறுகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு கற்பதை சிறப்பு நோக்கமாகக் கொண்டிருந்தது.
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் துசித சில்வா அவர்கள் நன்றியுரையை நிகழ்த்தியதுடன் விரிவுரையாளருக்கு நினைவுச் சின்னமும் வழங்கினார்.