27th February 2023 09:09:25 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின்23 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டின் புனானியில் உள்ள படையலகு பயிற்சிப் பாடசாலையில் பெப்ரவரி 21-22 திகதிகளில் 'தேனீ வளர்ப்பு' குறித்த இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 23 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க அவர்களினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
'பிங்கு வள பாதுகாப்பு அமைப்பின்' செயலாளர் திரு திஸ்ஸ பண்டார தம்பவிட்ட மற்றும் 'பிங்கு வள பாதுகாப்பு அமைப்பின்' தொழில்நுட்ப வல்லுனர் திரு நுவன் கீர்த்தி ஆகியோர் இப் பயிற்சிப் பட்டறையை நடாத்தினர்.
23 வது காலாட் படைபிரிவு, 3 வது இயந்திரவியல் காலாட் படையணி, 1 வது கொமாண்டோ படையணி மற்றும் 2 வது இலங்கை சேவை படையணிகளின் படையினர் இந்த செயலமர்வில் பங்குபற்றினர்.