26th March 2023 21:57:53 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்குட்பட்ட 66 வது காலாட் படைப்பிரிவின் 661 வது காலாட் பிரிகேடின் 5 வது (தொ) இயந்திரவியற் காலாட் படையணி படையினருக்கும் முல்லைத்தீவு பள்ளிக்குடா கலையோலி விளையாட்டுக் கழகத்திற்கும் இடையிலான நட்புறவு கிரிக்கெட் போட்டி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணத்தை ஊக்குவிக்கும் திட்டமாக பள்ளிக்குடா 5 வது (தொ) இயந்திரவியற் காலாட் படையணி விளையாட்டு மைதானத்தில் மார்ச் 22 இடம்பெற்றது.
அப்பகுதியில் திரண்டிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்ட இப்போட்டியில் கடும் போட்டியில் இறுதியில் 5 வது (தொ) இயந்திரவியற் காலாட் படையணி வெற்றி பெற்றது. வெற்றியாளர்கள் தங்கள் போட்டியாளர்களுக்கு எதிராக 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
66 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளின் ஜயவர்தன அவர்கள் 661 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் நளின் செனவிரத்னவுடன் இணைந்து போட்டியைப் பார்வையிட்டதுடன் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் சாதனை படைத்தவர்களுக்கும் அன்றைய பிரதம விருந்தினர் வெற்றிக்கிண்ணங்களை வழங்கினார்.
இந்தப் போட்டியை சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.