12th June 2023 18:43:36 Hours
முதலாம் படையின் 53 வது படைப்பிரிவின் படையினர் 53 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஜிபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ எனடிசி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தம்புள்ளை நகரில் ஜூன் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் பொசன் விழா வலயத்தை நடத்தினர். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களினால் இது திறந்து வைக்கப்பட்டது.,
தம்புள்ளை பொசன் வலயம் வண்ணமயமான 'பொசோன்' விளக்குகள் மற்றும் அன்னதானங்கள் அப்பகுதி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், தம்புள்ளை பிரதேச செயலக அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.