12th June 2023 18:47:36 Hours
அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் 'தலைமைத்துவம் மற்றும் தொழிலாண்மை அபிவிருத்தி பாடநெறி - 49 இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (ஜூன் 10) அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது. இராணுவத்தில் உள்ள பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த 95 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் இரண்டு மாத கால வதிவிடப் பாடநெறியை பின்பற்றினர்.
பாடநெறியின் சிறந்த மாணவராக 10 வது இலங்கை பீரங்கி படையணியின் லான்ஸ் பொம்பார்டியர் விஎம்எஸ்ஈ கமகே விருது பெற்றார்.சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக போர்ப் பயிற்சிப் பாடசாலையின் கட்டளை அதிகாரி கேணல் எம்கேஏடி சந்திமால் ஆர்எஸ்பீ அவர்கள் கலந்துக் கொண்டார்.