31st May 2023 20:37:09 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 57 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் கிளிநொச்சி பிரதேச மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நிமித்தம் மே 26-27 ஆம் திகதிகளில் கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாள் கைப்பந்து பயிற்சியை வழங்கினர்.
இப் பயிற்சி நிகழ்வில் 150 மாணவர்களும் 12 பாடசாலை விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களும் பங்குபற்றியதுடன், இலங்கை இராணுவ கைப்பந்து குழுவின் பயிற்றுவிப்பாளர்கள் இப்பயிற்சிக்கு தலைமை தாங்கினர்.
571 வது காலாட் பிரிகேட் படையினர், 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 9 வது இலங்கை சிங்கப் படையணி படையினருடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இப் பயிற்சி நிறைவில் 57 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேசீபீ பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. காதட செல்வன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.