11th May 2023 19:30:47 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது காலாட் படைப்பிரிவு படையினர், அஸ்கிரிய ராஜ மகா விகாரையின் கலாநிதி வண. ஹந்தகனாவே விமலதம்ம தேரர் அவர்களின் கருத்தியல் திட்டத்திற்கு அமைவாக மாத்தளை மாத்தலாப்பிட்டி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வறிய பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வை திங்கட்கிழமை (08) முன்னெடுத்தனர்.
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபி்ள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கோல்டன் கிரவுன் ஹோட்டலின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு சானுக விஜயகோன் அவர்கள் இந்த திட்டத்திற்கு அனுசரனை வழங்கினார்.
விநியோகத்தின் போது, 119 மாணவர்களுக்கு பாடசாலை உபகரண பொதிகளைப் வழங்கினர். வழங்கப்பட்ட பொதிகள் ஒவ்வொன்றும் 8500.00. ரூபா பெறுமதியாகும்
11 வது காலாட் படைப்பிரிவு தளபதி, திரு சானுக விஜயகோன் ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.