12th May 2023 18:15:46 Hours
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் டபிள்யூஎம்என்கே பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 231 வது காலாட் பிரிகேட் படையினர் 'லிட்டில் சிஸ்டர்ஸ் ஒப் தி பூவர்” இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு திங்கட்கிழமை (மே 8) மதிய உணவு வழங்கினர்.
25 ஆண் மற்றும் 25 பெண் முதியவர்கள் இசை நிகழ்ச்சிக்கு மத்தியில் படையினரால் வழங்கப்பட்ட மதிய உணவை சுவைத்தனர். மேலும், முதியவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டன. அனுசரணையாளரான திருமதி எஸ்டீகே குமாரி அவர்கள் இராணுவத்திற்கு தேவையான உணவு வகைகளை கொள்வனவு செய்வதற்கு 50,000 ரூபா நிதியுதவியை வழங்கினார்.
இந்நிகழ்வில் 231 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூஎம்என்கேடீ பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு.உதித் லியனகே, 231 வது காலாட் பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூஜிஎன்டீ வீரசிங்க மற்றும் படையினர் கலந்துகொண்டனர்.