03rd January 2023 20:28:39 Hours
கஜபா படையணியின் பிரிகேடியர் தினேஷ் உடுகம அவர்கள் செவ்வாய்க்கிழமை (3) இராணுவத் தலைமையகத்தில் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்றார்.
'செத் பிரித்' பாராயாணங்களுக்கு மத்தியில், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் பல அதிகாரிகள் முன்னிலையில், அதிகாரப்பூர்வ ஆவணத்தில் தனது கையொப்பமிட்டு தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடமைகளை பொறுப்பேற்ற பிரிகேடியர் தினேஷ் உடுகம அவர்கள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் உரையாடியதுடன் எதிர்காலத்தில் இப் பணிப்பகத்தின் கடமைகள் தொடர்பாக தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.