Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2022 18:45:56 Hours

கிழக்கு பாதுகாப்பு படையினர்கள் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 23 வது படைப்பிரிவின் 231 வது பிரிகேடின் 3 வது (தொ) இராணுவப் புலனாய்வு படையணியின் படையினர் கல்குடா பொலிஸ் நிலையப் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து ரூ.340,000/= பெறுமதியான 21 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் (ஐஸ்) மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

மேலும், வியாழக்கிழமை (17) கல்குடா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து ரூபா 16,500/= பணத்தொகை நான்கு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மோட்டார் கார் என்பன கைபற்றப்பட்துடன், போதைப்பொருள், பணம் மற்றும் இதர பொருட்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, 23 வது காலாட் படைப்பிரிவு தளபதி மற்றும் 231 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர் இணைந்து இந்தச் சோதனையை உன்னிப்பாகக் கண்காணித்து அவற்றை செயற்படுத்தினர்.