21st November 2022 22:25:30 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சமூக சேவைத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (20) பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 30 வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இந் நன்கொடையானது தெற்கு நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கபெற்ற அனுசரணையால் முன்னெடுக்கப்பட்டது.
காலச்சென்ற பிரிகேடியர் ஆர்.பி லியனகேயின் மகளான திருமதி குஷினி லியனகே அவர்களின் உதவியோடு ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாக கொண்ட நன்கொடையளரான திருமதி திலக பெரேரா அவர்களின் உதவியுடன் யாழ்.பாதுகாப்பு படை தலைமையக கேணல் ஒருங்கினைப்பு கேணல் சுரங்க டி சில்வாவின் ஒருங்கிணைப்பின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் கலந்து கொண்டுடதுடன் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் தம்மிக்க கருணாபால, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் அனுர பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.