21st November 2022 22:21:54 Hours
தம்பேகொட, மாளிகாவில பிரதேசத்தில் சேவையாற்றும் 18 கெமுனு ஹேவா படையணியின் 14 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 75 அதிகாரிகள் மற்றும் படையினர்களால் வியாழக்கிழமை (17) மொனராகலை வைத்தியசாலையில் இரத்த வங்கிக்கு இரத்த தானம் வழங்கினர்.
12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மிஹிது பெரேரா அவர்களின் வழிகாட்டலுக்கமைய 121 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக உடோவிட்ட அவர்களின் மேற்பார்வையில் இத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மொனராகலை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகளுக்குப் இரத்தம் போதுமானதாக இல்லாததை வைத்தியசாலையின் இரத்த வங்கியினர் இராணுவத்தினரின் உதவியை நாடியதை தொடந்து இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
18 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஆர்.எம்.பதிராஜ தனது படையினருடன் இணைந்து முகாம் வளாகத்தில் இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்தார்.
இத் திட்டம் 18 வது கெமுனு ஹேவா படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி மேஜர் டி.டி லொகுசிங்ஹாராச்சி அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.