Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th October 2022 17:42:14 Hours

51 வது படைப்பிரிவின் புதிய தளபதி மதப் பிரமுகர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களை மரியாதை நிமித்தம் சந்திப்பு

யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் அமைந்துள்ள 51 வது படைப்பிரிவின் தளபதியாக அண்மையில் கடமைகளைப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் மகேந்திர பெர்னாண்டோ புதன்கிழமை (12) யாழ்.கோப்பாயில் உள்ள பல மதப் பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகளை மரியாதை நிமி்த்தம் சந்தித்தார்.

முதலில் யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை சர்வதேச பௌத்த பீடத்தில் உள்ள மகாநாயக்கர்களை சந்தித்து பிரதமகுருவான வணக்கத்துக்குரிய மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர்களிடம் ஆசி பெற்றார். பின்னர், அவர் யாழ்ப்பாண ஆயர்.அருட்தந்தை டாக்டர் ஜஸ்டின் பி ஞானப்பிரகாசம் அவர்களையும் சந்தித்தார்.

பின்னர் மேஜர் ஜெனரல் மகேந்திர பெர்னாண்டோ அவர்கள் நல்லை ஆதீனத்தின் தலைவர் ஸ்ரீ லால் ஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் அன்றைய தினம் 51 வது படைப்பிரிவின் தளபதி அவர்கள் யாழ்.மாவட்டச் செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் மற்றும் யாழ்.பிரதேச செயலாளர் திரு.எஸ்.சுதர்சன் ஆகியோரை சந்தித்தார்.