Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th October 2022 17:38:02 Hours

யாழ். பாதுகாப்பு படை தலைமையக மற்றும் வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரிவு படையினரால் “கட்டின பூஜை” விழாவிற்கு பங்களிப்பு

காங்கேசன்துறை வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ ரஜ மகா விகாரையில் வருடாந்த ‘கட்டின பூஜை’ ஒக்டோபர் 16-17 ஆம் திகதிகளில் விகாரையின் பிரதமகுருவான வண. கிந்தோட்ட நந்தராம தேரரின் தலைமையில் ஆரம்பமானது.

யாழ். பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் தனது படையினருடன் இந் நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரிவு தளபதி பிரிகேடியர் கிளிபோர்ட் சொய்சா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரிவின் கீழ் உள்ள அனைத்து படைப்பிரிவு படையினரும் வருடாந்த விழாவினை நடாத்துவதற்கு தமது ஆதரவினை வழங்கினர்.

அனைத்து பௌத்த பிக்குகளும் 'ஹீல் தான' (காலை உணவு) மற்றும் 'அடபிரிகார' வழங்கலுடன் சமய நிகழ்ச்சி நிறைவடைந்தது. இறுதி “கடினான்சினா” உரையானது விகாரையின் பிரதமகுருவான அமரபுர ஸ்ரீ கல்யாணவங்ச மஹா நிகாயே அனுஷசக வண.அம்பலாங்கொட நிந்தனே வஜிரஞ்ஞான தேரரால் நிகழ்த்தப்பட்டது.