Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th September 2022 14:01:35 Hours

சுவிஸ் தூதுக் குழுவினர், யாழ். தளபதியை சந்திப்பு

சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதி தலைவர் திரு ரவுல் இம்பாச், பிராந்திய பாதுகாப்பு ஆலோசகர் திரு. கவுடென்ஸ் ரஸ்ட், மற்றும் சிரேஷ்ட தேசிய திட்ட அதிகாரி திருமதி சுஷாந்தி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய சுவிஸ் தூதுக் குழுவினர் புதன்கிழமை (28) வடக்கிற்கான சுற்றுப்பயணத்தின் போது யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் சுவிஸ் தூதுக் குழுவினருடன் அவரது அலுவலகத்தில் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன், யாழ் தளபதி தூதுக்குழுவினருக்கு யாழ். குடாநாட்டில் தற்போது நடைபெற்று வரும் நல்லிணக்கத் திட்டங்கள், சமூக-அபிவிருத்தி, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகள், பாதுகாப்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்தார்.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரிகேடியர் பொதுப் பணி மற்றும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கேணல் பொதுப்பணி ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.