Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th September 2022 19:12:34 Hours

3 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினரால் காட்டுத்தீ அணைப்பு

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் கீழுள்ள 122 வது பிரிகேடின் 3 வது இலங்கைத் தேசிய பாதுகாப்பு படையினர், மொரவக கீரம, மாப்பிட்டி கந்த பொது வனப் பகுதியில் சனிக்கிழமை (24) வேகமாகப் பரவிய காட்டுத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால, 3 வது இலங்கைத் தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எஸ்.வயி ஸ்ரீமால் தனது படையினருடன் சில மணிநேரங்களில் பரவிய காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

காட்டுத்தீ 30 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியிருந்த நிலையில், படையினர் எந்தவித சேதமும் ஏற்படாமல் நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.