Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th July 2022 15:53:03 Hours

142 & 144 வது பிரிகேட் படையினர் இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கினங்க இரத்ததானம் வழங்கள்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 142 மற்றும் 144 வது பிரிகேட் படையினர், மத்திய இரத்த வங்கியின் அழைப்பின் பேரில் கொழும்பு விஷாகா வித்தியாலய நிர்வாகத்தினால் பாடசாலை வளாகத்தில் 2022 ஜூலை 02 ஆம் திகதி நடத்தப்பட்ட இரத்த தான முகாமின் போது இரத்தத்தை வழங்கினர்.

அதன்படி, 40 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அடங்கிய குழுவொன்று தமது பிரிகேட் தளபதிகளின் அறிவுறுத்தலின் பேரில் பாடசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க தமது இரத்தத்தை வழங்க முன்வந்தனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் நிலவும் கடுமையான இரத்த பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இந்த திட்டத்திற்கு தனது ஆசிகளை வழங்கினார்.