Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th June 2022 18:10:55 Hours

விடைப்பெற்று செல்லும் தளபதிக்கு யாழ். இளைஞர்கள் பாராட்டு

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாக இருந்து இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தளபதியாகப் பொறுப்பேற்பதற்காக விடுகை பெற்றுச் செல்லும் மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களினால் ஆற்றப்பட்ட சேவைக்கு பாராட்டு தெரிவித்து யாழ். இளைஞர்களால் ஞாயிற்றுக்கிழமை (12) நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

யாழ்.இளைஞர்களின் பிரதிநிதிகள் குழுவொன்று வெளியேறும் யாழ் தளபதியை சந்தித்த பின்னர் அவருக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

வெளியேறும் யாழ் தளபதியின் பதவிக்காலத்தில், பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவுகளையும் நல்லுறவையும் மேம்படுத்துவதற்காக சிவில்-இராணுவ ஒருங்கிணைப்புத் திட்டங்களை அவர் ஆரம்பித்து வைத்தார். தெல்லிப்பளை பிரதேச செயலக மைதானத்தில் உள்ள தீட்டி விளையாட்டு மைதானம் மற்றும் பார்வையாளர் மண்டபம் என்பன அப்பகுதி இளைஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாதுகாப்பு படை தளபதியினால் முற்றாக புனரமைத்துக் கொடுக்கப்பட்டது. மேலும், இளைஞர் சங்கங்கள், இளைஞர் கழகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றையும் அவர் ஒருங்கிணைப்புச் செய்திருந்தார்.