14th June 2022 17:32:56 Hours
பொத்துவில் முஹுதுமஹா விகாரையில் 01 ஜூன் 2022 அன்று இரத்த தான முகாம் ஒன்றை நடத்துவதற்கு அவசியமான உதவிகளை 23வது சிங்கப் படையணியின் சிப்பாய்கள் வழங்கியிருந்தனர்.
அம்பாறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்தியர்கள் குழுவினர் மற்றும் பணியாளர்களும் உபகரணங்களுடன் இரத்தம் சேகரிக்கும் பணியை மேற்கொண்டிருந்ததோடு, இதன்போது 242 வது பிரிகேடின் 2 அதிகாரிகள் மற்றும் 63 சிப்பாய்களுமாக 65 இராணுவ வீரர்கள் இரத்ததானம் வழங்கினர்.