Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th June 2022 12:52:21 Hours

பீரங்கி படையணியின் ஓய்வுபெறும் 3 மேஜர் ஜெனரல்களுக்கு பிரியாவிடை நிகழ்வு

இலங்கை பீரங்கி படையணி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (3) ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க, மேஜர் ஜெனரல் அஜித் கொலம்பதந்திரி மற்றும் மேஜர் ஜெனரல் வந்தித மஹிங்கந்த ஆகியோருக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது.

34 வருடங்களுக்கு மேலாக இலங்கை இராணுவத்தில் முன்மாதிரியான சேவையாற்றிய அந்த மூன்று சிரேஷ்ட அதிகாரிகளும் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து மேஜர் ஜெனரல்களாக நிலை உயர்வுகளைப் பெற்றுள்ளனர்.

விழாவின் ஆரம்பத்தில் படையணி தலைமையகத்தின் நினைவுத்தூபியில் வீரமரணம் அடைந்த போர்வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதுடன் அங்கு மூன்று இராணுவ பீரங்கி படையணி சிரேஷ்ட படைவீரர்களினாலும் அவர்களின் நினைவாக மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த சிரேஷ்ட அதிகாரிகள் சார்ஜென்ட் உணவறையில் சிற்றுண்டி விருந்துக்கு அழைக்கப்படுவதற்கு முன்பு ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல்களுக்கு தனித்தனியான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

விடைப்பெற்று செல்லும் மூன்று மேஜர் ஜெனரல்களுக்கு வழங்கப்பட்ட இரவு விருந்துபசாரத்துடன் பிரியாவிடை விழா நிறைவடைந்தது. இந்த நிகழ்வின் போது மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர (ஓய்வு) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.