21st March 2022 20:37:59 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 68 வது படைப் பிரிவின் 12 வது தளபதியாக இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ரொஹான் பொன்னம்பெரும திங்கட்கிழமை (14) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தளபதிக்கு படைப்பிரிவு நுழைவாயிலில் பாதுகாப்பு அறிககையிடல் மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து பதவி நிலை அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டார்.பின்னர் பிரிகேடியர் ரொஹான் பொன்னம்பெரும தனது புதிய அலுவலகத்தில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்.
பின்னர், நாளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தளபதி படைப்பிரிவு வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நட்டார். பின்னர் படையினர் மத்தியில் உரையாற்றிய அவர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிற்றுண்டி நிகழ்விலும் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் 681,682 பிரிகேட் தளபதிகள், 68 வது படைப் பிரிவின் தலைமையகத்தின் பதவி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.