Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st December 2021 20:45:39 Hours

இராணுவத்தின் ஒருங்கிணைப்புடன் சிறந்த மாணவருக்கு பாடசாலை உபகரணம் மற்றும் கணினி வழங்கள்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 111 வது பிரிகேட் படையணியினர், பம்பரதெனிய பிரதேசத்தில் உள்ள வெலம்படப கல்லூரியில் கல்வி கற்கும் திறமை வாய்ந்த மாணவன் ஒருவரின் உயர்கல்விக்காக மாதாந்த புலமைப்பரிசில் ரூ.5000 மற்றும் ரூ.1 லட்சம் பெறுமதிமிக்க கணினி ஆகியன திங்கள் கிழமை (27) வழங்கி வைக்கப்பட்டன.

கல்வியில் சிறந்து விளங்கும் வறிய மாணவரான சத்சர பிரசாத் பண்டார என்பவருக்கு கடுவளையைச் சேர்ந்த நன்கொடையாளரான திருமதி எம். கொரத்தோட்ட அவர்கள் கல்வி உதவிகளை வழங்கியுள்ளார்.

திருமதி கொரத்தோட்டை தனது சகோதரி மற்றும் 111 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி லெப்டினன்ட் கேணல் எச்.எம்.ஏ.பி குமார ஆகியோருடன் இணைந்து குறித்த ஊக்கத் தொகைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.