Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th December 2021 12:19:31 Hours

கம்பெட் பயிற்சி கல்லூரியின் புதிய தளபதியாக பிரிகேடியர் ரொஷான் ஜயமான்ன கடமைகளை ஆரம்பிக்கிறார்

அம்பாறையிலுள்ள கம்பெட் பயிற்சி கல்லூரியின் 43 வது தளபதியாக நியமனம் பெற்றுக்கொண்ட பிரிகேடியர் ரொஷான் ஜயமான்ன அவர்கள் வௌ்ளிக்கிழமை (24) அப்பாறையிலுள்ள கம்பெட் பயிற்சி கல்லூரி வளாகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

புதிய தளபதியின் வருகையின் போது நுழைவு வளாகத்தில் சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து, மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பம் இட்ட தளபதியவர்கள் பதவியேற்பின் நினைவம்சமாக சந்தன மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார்.

அவருக்கு முன்பாக மேற்படி நியமனத்தை வகித்த மேஜர் ஜெனரல் கல்ப சஞ்ஜீவ அவர்கள் 11 வது படைப்பிரிவின் தளபதியாக நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கம்பெட் பயிற்சி கல்லூரியின் கட்டளை அதிகாரி கேணல் திலாந்த ஜயவர்தன, அம்பாறை கம்பெட் பயிற்சி கல்லூரியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தனர்.