Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2021 18:26:20 Hours

மின்னியல் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு

இலங்கை இராணுவத் தொண்டர் படையின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய செவ்வாய்க்கிழமை (21) தம்புள்ளை மின்னியல் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 13 வது படைத் தளபதியாக இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மத அனுஷ்டானங்களுக்குப் பிறகு முறையான ஆவணத்தில் கையொப்பமிட்டதன் மூலம் புதிய அலுவலகத்தை அவர் முறையாக ஏற்றுக்கொண்டார். இவ் விழாவில் நிலையத் தளபதி பிரிகேடியர் குமார வனசிங்க மற்றும் ரெஜிமென்ட் பேரவை உறுப்பினர்கள், பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மின்னியல் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அவர் படையணி தலைமையகத்தை வந்தடைந்ததும், அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், மின்னியல் மற்றும் இயந்திர பொறியியல் படையணி போர் வீரர் நினைவு தூபியில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் நினைவாக மலர் அஞ்சலி செலுத்திப்பட்டது. பின்னர் அவருக்கு முறையிலான அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், தளபதி மரக்கன்று நடுவதற்கு அழைக்கப்பட்டார் பின்னர் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றினார். நிறைவில் படையினருடன் தேனீர் விருந்துபசாரத்தில் கலந்துக் கொண்டார்.