Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th December 2021 21:30:14 Hours

11 வது படைப்பிரிவினரால் தெல்தெனிய பாடசாலைக்கு கனிணி ஆய்வுக்கூடம் நிர்மாணிப்பு

முதலாவது இலங்கை ரைபிள் படையணி சிப்பாய்களின் ஆளணி வளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவதுவம் மற்றும் பிரதேச வாசிகளின் ஒத்துழைப்புடன் எகிலிடி லொஜிஸ்டிக் தனியார் (Agility Logistics (pvt) Ltd) நிறுவனத்தின் நிதி உதவியை கொண்டு தெல்தெனிய ரம்புக்வெல்ல கனிஷ்ட பாடசாலைக்கான கனிணி ஆய்வுக்கூடம் நிர்மாணிக்கப்பட்டது.

இவ் ஆய்வுகூடம் முதலாவது இலங்கை ரைபிள் படையணியின் கட்டளை அதிகாரியின் அழைப்பின் பேரில் திகனையில் அமைந்துள் 11 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கல்ப சஞ்சீவ அவர்களால் 111 பிரிகேட் தளபதி பிரிகேடியர் டீஎம்ஆர்பி ரத்நாயக்க அவர்களுடன் இணைந்து சனிக்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது.

அதே சமயத்தில் எகிலிடி லொஜிஸ்டிக் தனியார் (Agility Logistics (Pvt) Ltd) நிறுவனத்தினால் புதிய கட்டிடத்தில் புதிய வகையான கனிணிகளும் பொருத்தப்பட்டன.