Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th December 2021 13:30:32 Hours

புதுமாத்தளன் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு பிக்குவால் நிவாரணப் பொதிகள் வழங்கல்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவின் 682 வது பிரிகேடின் 6 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் படையினர்கள், முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் உள்ள வறிய குடும்பங்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகளை குருநாகல் தோராய நாகொல்லே காஷ்யப தேரரின் அனுசரணையுடன் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு அமைய வியாழக்கிழமை (16) ஏற்பாடு செய்தனர்.

புதுமாத்தளன் றோமன் கத்தோலிக்க பாடசாலையின் 44 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் அவர்களது பெற்றோர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன. அனுசரணை வழங்கிய குருநாகல் தோராய நாகொல்லே காஷ்யப தேரர் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி ஆகியோர் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய விநியோகங்களை முன்னெடுத்தனர்.

681 வது பிரிகேட் தளபதி, 682 வது பிரிகேட் தளபதி, கட்டளை அதிகாரிகள், அரச அதிகாரிகள், பாடசாலை ஊழியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.