03rd December 2021 14:38:10 Hours
61வது படைப்பிரிவின் 12 களப் பொறியியலாளர்கள் மற்றும் முதலாவது இலங்கை முன்னோடி படையணியின் படையினர் முறையே நாகொடை மற்றும் பாணந்துறை ஆதார வைத்தியசாலைகளுக்கு தாதியர் உதவியாளர்கள் மற்றும் சிற்றூழியர்கள் புதன்கிழமை (01) தொழிற்சங்க கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து முறையே நாகொடை மற்றும் பாணந்துறை ஆதார வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்கினர்.
பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் பணிப்புரையின் பேரில் மேற்கு பாதுகாப்புப் படை தலைமைய தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா அவர்களின் அறிவுறுத்தலில் 61 வது படைப்பிரிவின் 612 வது பிரிகேட் தளபதி மற்றும் 12 வது களப் பொறியியல் படையணி மற்றும் முதலாவது இலங்கை முன்னோடி படையணி ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையில் அவசர தேவைகளுக்காக படையினரின் பங்களிப்பு வழங்கப்பட்டது.