04th December 2021 10:14:34 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஹம்பாந்தோட்டை 12 வது படைப்பிரிவின் படையினரால் இராணுவத்தின் ஆதரவற்ற குடும்பத்தினருக்கு வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைய ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரின் ஆதரவுடன் கதிர்காமம் கோதமீகமவில் வசிக்கும் திரு பி.எஸ்.வசந்த என்பவரின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு ஒரு புதிய வீட்டை நிர்மாணித்தனர்.
அதன்படி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி மேஜர் எஸ். வீரசூரிய அவர்களின் அனுசரணையின் கீழும் ஹம்பாந்தோட்டை 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க தலைமையில் சம்பிரதங்களுக்கு அமைவாக நவம்பர் 30 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்ற எளிமையான வைபவத்தில் புதிய வீடு பயனாளியடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் இராணுவத்தினர் மற்றும் நன்கொடையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
122 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜனக பல்லேகும்புர , பல கனிஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இவ் நிகழ்வில் பங்குபற்றினர்.
மேலும் சில அதிகாரிகள், பயனாளிகளின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.