Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2021 08:14:34 Hours

முல்லைத்தீவு தளபதி தனது கட்டளை அமைப்புகளுக்கு விஜயம்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீ்ழ் உள்ள தனது கட்டளை நிறுவனங்களுக்கு கள விஜயத்தைத் மேற்கொண்டார்.

அதற்கமைய, அவர் நவம்பர் 29 ஆம் திகதி 59 வது படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளை அமைப்புக்களான 591, 592 மற்றும் 593 வது பிரிகேடுகளுக்கு தனது உத்தியோக பூர்வ விஜயத்தை மேற் கொண்டார். இவ்விஜயத்தின் போது குறித்த நிறுவனங்களின் தளபதிகளால் தளபதிக்கு வரவேற்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து மர நடுதல் மற்றும் அவர்களின் வகிபங்கு பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டன. அத்துடன் குறித்த அமைப்புகளின் படையினர்களுக்கு உரையும் ஆற்றினார்.

பின்னர், மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அப்பகுதியில் உள்ள 7 வது இலங்கை இராணுவ போர் கருவிகள் படையணி, 24 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 23 வது இலங்கை இலேசாயுத காலாட் படை முகாம்களுக்குச் சென்று படையினரைச் சந்தித்தார்.

குறித்த படையலகுகளின் கட்டளை அதிகாரிகள் அவருக்கு தங்களின் பொறுப்புகள் தொடர்பாக பல கருத்துக்களை தெரிவிக்கப்பட்டன. பின்னர் வருகையின் நினைவாக முகாம் வளாகங்களில் மரக்கன்றுகளை நட்டு வைக்க அவரை அழைத்தனர். இந் நிகழ்வுகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி மேற் கொள்ளப்பட்டன.