Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th December 2021 09:14:34 Hours

பௌத்த பிக்குவின் அனுசரனையில் இராணுவத்தினரால் நிவாரணப் பொதிகள் வழங்கல்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பகர ரணசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் வண. அநுராதபுர அனுருத்த தேரரின் அனுசரணையில் உரேவ இலக்க 11 மற்றும் போகஹவெவ இலக்கம் 14 பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு 100 உலர் உணவுப் பொதிகள் வழங்கல் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பினால் ஞாயிற்றுக்கிழமை (28) ஏற்பாடு செய்யப்பட்டது.

62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 14 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஜினேஷ் லியனகம தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வு அனுராதபுரத்தைச் சேர்ந்த வண. அனுருத்த தேரர் மற்றும் 622 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.