03rd December 2021 14:46:08 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது படைப் பிரிவின் 242 பிரிக்கேட்டின் 23 வது இலங்கை சிங்கப் படையினரால் நிர்மாணிக்கபட்ட ஒரு புதிய வீடு ‘’ ஒபட கெயக் – ரட்டட ஹெட்டக்’’ என்ற வீடமைப்பு திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின், அம்பாறை, பானம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு செவ்வாய்க்கிழமை (30) பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
கிழக்குப் இராணுவ பாதுகாப்புப் படைத் தலைமையகம தளபதி மேஜர் ஜெனரல் சன்னவீரசூரிய அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பணியை 242 வது பிரிக்கேட் படையினரின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் அதிகபட்ச ஆதரவை வழங்கி இந்த வீட்டை நிர்மாணிக்குமாறு பணித்தார்.
திருமதி கே. மலேத்தனா அவர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் வறுமையில் வாழ்வதை தெரிவித்ததையடுத்து, நிதியுதவியாளர்களின் அனுசரனையில் இராணுவத்தினரின் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந் நிகழ்விற்கு கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்னவீரசூரிய அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதை தொடர்ந்து புதிய வீட்டின் திறப்பு பயனாளரிடம் கையளிக்கப்பட்டது. படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இப் புதிய வீடு மஹா சங்க உறுப்பினர்களின் மத அனுஷ்டானங்களுடன்,பால் பொங்குதல் உள்ளிட்ட சம்பிரதாய நிகழ்வுகளும் இடம் பெற்றன.
இந் நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள், 24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவா, 242 வது பிரிகேட் தளபதி, 23 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட கிராம பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.