Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th November 2021 21:10:55 Hours

3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் மாணிக்க கங்கை அண்மித்த பகுதிகளில் சிரமதானம்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் 122 பிரிகேடின் கீழ் உள்ள 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினரால் வெள்ளிக்கிழமை (12) கதிர்காமம் புனித பகுதியிலுள்ள மாணிக்க கங்கை மற்றும் அதனைச் அண்மித்த பகுதிகளில் சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.

இதன்போது 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க அவர்கள் வழங்கிய வழிகாட்டலின் கீழ் 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் நடைபெற்றது.