11th October 2021 10:00:31 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பழுதுபார்க்கப்பட்ட வாகனங்களை இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கிழக்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வுகள் சனிக்கிழமை (9) கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் மேஜர் ஜெனரல் சன்ன விரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அதன்படி, ஜீப், வண்டி, வேன்கள், பேருந்துகள், லொரிகள், டிரெக்டர்கள் மற்றும் பவுசர்கள் உட்பட 21 வாகனங்கள் 3 வது இலங்கை இராணுவ மின்னியல் மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியினால் கிழக்கு துகாப்பு படைத் தளபதியின் வேண்டுகோளுக்கிணங்க இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதி தளபதி மேஜர் மகேஷ் அபேரத்ன, 3 வது இலங்கை மின்னியல் மற்றும் மின்சார பொறியியல் படையின் கட்டளை அதிகாரி மேஜர் கோலித அல்மெய்டா , அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.