Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th October 2021 07:54:37 Hours

யாழ். படைகளின் ஆதரவுடன் தேவையுள்ள குடும்பத்திற்கு புதிய வீடு

யாழ்ப்பாணம் பளையிலுள்ள குடும்பமொன்றின் அவல நிலைமை குறித்து யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து யாழ். பாதுகாப்பு படையின் சிப்பாய்களால் நிர்மாணிக்கப்ட்ட வீடொன்று இராணுவ தினத்தன்று, மேற்படி வறிய குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கான நிதி உதவி “தியாகி” அறக்கட்டளையின் தலைவர் திரு வீ. தியாகேந்திரன், கொடிகாமம் மக்கள் வங்கி கிளை முகாமையாளர் திரு சிவன்தராஜா கோபிகிருஷ்ணா மற்றும் தொழிலதிபர் திரு ராஜீவ் சேனித்தராஜா ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.

திரு முத்தையா விஜயகுமார் என்பவரின் குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட மேற்படி வீட்டை பயனாளி குடும்பத்திற்கு கையளிக்கும் நிகழ்வு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்ததோடு, 08 ஒக்டோபர் 2021 அன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் 55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன அவர்களும் கலந்துகொண்டார்.

இதன்போது யாழ். தளபதியால் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என்பனவும் பயனாளி குடும்பத்திற்கு வழங்கி வைக்கப்பட்டன. மேலும் குடும்பத்திலுள்ள பிள்ளைகளுக்கு அவசியமான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

552 வது பிரிகேட் தலைமையக தளபதி அவர்களின் மேற்பார்வையில் 23 வது கெமுனு ஹேவா படையினரால் நிர்மாணத்திற்கு அவசியமான கட்டுமான உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் 55 வது படைப்பிரிவு தளபதி, கட்டளை தளபதிகள், , சிரேஸ்ட அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சிப்பாய்கள் என பலரும் கலந்துகொண்டனர்.